Thursday, April 23, 2009

இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

இரமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் S.சலிமுல்லாகான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு.

இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் எஸ்..சலிமுல்லாகான் அவர்கள் முதுகுளத்தூர் ஒண்றியம் கிருஸ்ணாபுரம், தணிச்சியம், ஒடைக்குளம், கிடாரம், மாரியுர், உப்பிலான், பேரையுர், முதுகுளத்தூர், முஸ்தபாபுரம், காக்கூர், தேரிருவேலி, காரையேந்தல் ஆகிய ஊர்களில் ஜமாத்துகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்குகள் சேகரித்தார். இவர்களுடன் கோவை.செய்யது (மாநில பேச்சாளர்) மற்றும் O.U.ரஹ்மத்துல்லா (மாநில பொருளாளர் த.மு.மு.க) மற்றும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு.

வேட்பாளர் சலிமுல்லாகான் அவர்கள் பேசும்போது சாலை வசதி , மின்சார வசதி, குடிதண்ணிர் மற்றும் மருத்துவ வசதி செய்துகொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இக்கூட்டத்திற்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment