Tuesday, May 19, 2009

மயிலாடுதுறை தொகுதி விபரங்கள்.

மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பெற்ற வாக்குகளின் விபரங்கள்

பேரவை தொகுதிகள்: 1. சீர்காழி (தனி), 2. மயிலாடுதுறை, 3. பூம்புகார், 4. திருவிடைமருதூர் (தனி), 5. கும்பகோணம், 6. பாபநாசம்.

மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பெற்ற வாக்குகள் 19, 816


மொத்த வாக்காளர்கள்: 10,87,027

ஆண்: 5,48,250

பெண்: 5,38,777

2004 தேர்தலில் பெற்ற வாக்குகள்.

மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்): 5,48,250
ஒ.எஸ்.மணியன் (அதிமுக): 2,15,469

மக்களவைத் தேர்தல் 2009 முடிவுகள்:

மொத்த வாக்குகள் -10,90,816

பதிவான வாக்குகள் - 7,99,586

ஓ.எஸ். மணியன் (அதிமுக) - 3,64,089.

மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்) - 3,27,235.

ஜி.கே. பாண்டியன் (தேமுதிக)- 44,754.

எம்.எச். ஜவாஹிருல்லா (மமக)- 19,816.

எஸ். கார்த்திகேயன் (பாஜக)- 7,486.

எல்.வி. சப்தரிஷி (பகுஜன் சமாஜ்)- 5,554.

எம். ராஜாமணி (சுயேச்சை)- 4,684.

எஸ். கணேசன் (வள்ளலார் பேரவை) 4,129.

எம். தட்சிணாமூர்த்தி (சுயேச்சை) 2,700.

கே. நாகராஜன் (சுயேச்சை) 2,599.

பி. ராஜகுமார் (சுயேச்சை) 2,584.

என். குணசேகரன் (சிபிஎம்எல்) 2,262.

தி. திமோத்யூ (சுயேச்சை) 2,051.

வி. ஜெயராமன் (சுயேச்சை) 1,828.

ஏ. கிருஷ்ணப்பா (சுயேச்சை) 1,377.

ஆர். வெங்கட்ரமணி (சுயேச்சை) 1,192.

கே.என். ஜெயக்குமார் (சுயேச்சை) 930.

வி. பாலாஜி (சுயேச்சை) 848.

சுடர் ஆர். காளிமுத்து (சுயேச்சை) 847.

அப்துல் ஜலீல் (சுயேச்சை) 734.

எஸ்.எம். பிரபுதாசன் (சுயேச்சை) 646.

எஸ். அறிவழகன் (சுயேச்சை) 627.

எம்.எச். அகமது மரைக்காயர் (சுயேச்சை) 610.

மத்திய சென்னை மக்களவை தொகுதி விபரங்கள்

சட்டப் பேரவை தொகுதிகள் விபரம். 1. வில்லிவாக்கம், 2. எழும்பூர் (தனி), 3. துறைமுகம், 4. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, 5. ஆயிரம் விளக்கு, 6.அண்ணா நகர்.

மொத்த வாக்காளர்கள்: 975217

ஆண்: 489902

பெண்: 485315

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி அவர்கள் பெற்ற வாக்குகள் 13, 160

2004 தேர்தலில்
தயாநிதி மாறன் ( தி முக): 3,16,329
பாலகங்கா ( தி முக): 1,82,151

2009 மக்களவை தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன் (திமுக) - 2,85,783
முகமது அலி ஜின்னா(அதிமுக)- 2,52,329
ராமகிருஷ்ணன்(தேமுதிக)- 38,959.

இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பெற்ற வாக்குகளின் விபரங்கள்

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி குறித்த விபரங்கள்

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் எஸ். சலிமுல்லாகான் பெற்ற வாக்குகள் 21,430

15 வது மக்களவை தேர்தல் 2009


இராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை தொகுதியில் இருந்த அறந்தாங்கியும், விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி என மொத்தம் 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியதாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மாறியுள்ளது. கடலாடி சட்டப்பேரவைத் தொகுதி முற்றிலுமாக நீக்கப் பட்டு விட்டது. மறுசீரமைப்பில் புதுக்கோட்டை தொகுதி நீக்கப்பட்டுவிட்டதால் அந்த மாவட்டத்தில் இருந்த அறந்தாங்கி தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

பேரவை தொகுதிகளின் விபரம்:
1)அறந்தாங்கி,
2)திருச்சுழி,
3)பரமக்குடி,
4)திருவாடணை,
5)இராமநாதபுரம்,
6)முதுகுளத்தூர்.

முந்தைய 2004 தேர்தலில் பெற்ற வாக்குகளின் விபரம்:
எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன் (திமுக): - 2,35,287
செ.முருகேசன் (அதிமுக): - 2,25,337

சட்டப்பேரவை தொகுதி வாரியக பெற்ற வாக்குகளின் விபரம்.


அறந்தாங்கி: எஸ். சலிமுல்லாகான், மனிதநேய மக்கள் கட்சி (1,489), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (21,658), ஜே.கே. ரித்தீஷ், திமுக (39,460), எஸ். திருநாவுக்கரசர், பா.ஜ.க. (28,917), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (1,745), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,456).

திருச்சுழி: எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (1,634), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (42,452), ஜே.கே. ரித்தீஷ், திமுக (56,467), திருநாவுக்கரசர், பாஜக (7,589), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (2,319), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,053).

பரமக்குடி: எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (3,637), வ. சத்தியமுர்த்தி, அதிமுக (43,113), ஜே.கே. ரித்தீஷ், திமுக (45,218), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,573), பிரிசில்லா பாண்டியன், பகுஜன்சமாஜ் (11,617), சிங்கை. ஜின்னா, தேமுதிக (4,575).

திருவாடானை: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க. (4,774), வ. சத்தியமுர்த்தி, அதிமுக (31867), ஜே.கே. ரித்தீஷ், திமுக (53,840), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (25,913), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (4,623), சிங்கை. ஜின்னா, தேமுதிக (6,154).

இராமநாதபுரம்: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க (6,712), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (38,698), ஜே.கே. ரித்தீஷ், திமுக (47,850), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (28,551), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (3,119), சிங்கை. ஜின்னா, தேமுதிக (9,393).

முதுகுளத்தூர்: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க.(3,184), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (47,032), ஜே.கே. ரித்தீஷ், திமுக (50,425), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,451), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (15,532), சிங்கை. ஜின்னா, தேமுதிக (8,926).

இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் விபரங்கள்:
மொத்த வாக்குகள் - 11,31,741
பதிவான வாக்குகள்- 7,74,266


1. ஜே.கே. ரித்திஷ் (திமுக) -2,94945
2. வ. சத்தியமூர்த்தி (அதிமுக) -2,25,030
3. எஸ்.திருநாவுக்கரசர் (பா.ஜ.க) -1,28,322
4. பிரிசில்லா பாண்டியன் (பகுஜன் சமாஜ்) -39,086
5. எஸ்.சலிமுல்லாகான் (மனித நேய மக்கள் கட்சி) -21,439
6. எஸ்.சிங்கை ஜின்னா (தேமுதிக) -49,571
7. ஆர்.முகம்மது ஆபித் அலி (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) -1,496

சுயேச்சை வேட்பாளர்கள்
8.கே.காளிமுத்து -1769
9. எஸ்.சண்முகையா பாண்டியன் -1119
10. எஸ்.சுவார்ட்ஸ் துரை -961
11. கே.செல்லத்துரை -1186
12. பாலமுருகன் -1244
13. பி.பாஸ்கரன் -2330
14. ஜி.முருகேந்திரன்-3471
15. எம்.ஐ.ஜஹாங்கீர்-5870

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 1951 முதல் 2009 வரை வெற்றி பெற்றவர்களில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமாக 6 முறை வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள், அவர்களை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் விவரம் அடைப்புக் குறிக்குள்:

1951-ம் ஆண்டு -நாகப்பசெட்டியார், காங் -1,09,110, (டி.சுந்தரம், கிஷான் மஸ்தூர்-44118),

1957-ல் பி. சுப்பையா அம்பலம், காங் -89,701, (ஆர்.கே. ராமகிருஷ்ணன், சுயே -50668), 1962-ல் எம். அருணாச்சலம், காங் -1,45,396, (சலிவதீஸ்வரன், சுதந்திரா-114513),

1967-ல் எம். ஷெரீப், சுயே -1,80,392 (எஸ். பாலகிருஷ்ணன், காங் -1,48,367),

1971-ல் பி.கே. மூக்கையாத் தேவர், பார்வர்டு பிளாக் -2,08,431, (எஸ். பாலகிருஷ்ணன், ஸ்தா. காங் -1,39,276),

1977-ல் பி. அன்பழகன், அதிமுக -2,97,612, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,22,482),

1980-ல் எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -2,75,049, (பி. அன்பழகன், அதிமுக -1,90,916),

1984-ல் வி. ராஜேஸ்வரன் -காங் -2,74,922, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,74,778),

1989-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,98,145, (சுப. தங்கவேலன், திமுக -2,18,601),

1991-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,48,415, (காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி, 1,76,889),

1996-ல் எஸ்.பி. உடையப்பன், த.மா.கா -3,31,249, (வி. ராஜேஸ்வரன், காங் -1,35,945),

1998-ல் வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,58,978, (எஸ்.பி. உடையப்பன், தமாகா -2,34,886),

1999-ல் கே. மலைச்சாமி, அதிமுக -2,65,253, (எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக -2,58,607),

2004-ல் எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக- 2,35,287, (செ. முருகேசன், அதிமுக-2,25,337),

2009-ல் கே. சிவக்குமார் என்ற ஜே.கே. ரித்தீஷ், திமுக -2,94,945, (வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,25,030).

தற்போது நடைபெற்று முடிந்துள்ள 15-வது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி. சத்தியமூர்த்தியை விட கூடுதலாக 69,915 வாக்குகள் பெற்று, ஜே.கே. ரித்தீஷ் வெற்றி பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி மக்களவை தொகுதி விபரம்.

பொள்ளாச்சி மக்களவை தொகுதி விபரங்கள்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சகோ இ. உமர் அவர்கள் பெற்ற வாக்குகள் 13,933 என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


சட்டமன்ற தொகுதி விபரம்: 1. தொண்டாமுத்தூர், 2. கிணத்துக்கடவு, 3. பொள்ளாச்சி, 4. வால்பாறை (தனி), 5. உடுமலைப்பேட்டை, 6. மடத்துக்குளம்.

மொத்த வாக்காளர்கள்: 1014130

ஆண்: 509161
பெண்: 504969

தனித் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி மக்களவையில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, தாராபுரம் (தனி), பொங்கலூர் ஆகியபேரவைத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. மறுசீரமைப்பில் பொங்கலூர் தொகுதி நீக்கப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதி ஈரோடு மக்களவையில் சேர்க்கப்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலை, புதிதாக உருவாக்கப்பட்ட மடத்துக்குளம் ஆகிய பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.


பேரூர் தொகுதியில் கோவை மாநகரையொட்டி இருந்த குறிச்சி, குனியமுத்தூர் நகராட்சிப் பகுதிகள் கிணத்துக்கடவு தொகுதியோடு இணைக்கப்பட்டுள்ளன. பேரூர் தொகுதியில் இருந்த கோவை மாநகராட்சியின் 48 முதல் 56 வார்டுகள், சில பேரூராட்சிப் பகுதிகள் தொண்டாமுத்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன கோவை மாநகரின் மையப் பகுதியில் வசித்தாலும், பொள்ளாச்சி மக்களவையில் இருக்கும்படி தொகுதி எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. நான்கு திசைகளிலும் பரப்பளவில் மிகப் பெரிய தொகுதியாகப் பரந்து விரிந்து காணப்படுகிறது.

பொள்ளாச்சித் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 10 லட்சத்து 13 ஆயிரத்து 708. ஆண்கள் 5 லட்சத்து 8 ஆயிரத்து 871. பெண்கள் 5 லட்சத்து 4 ஆயிரத்து 837. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் மற்றும் தலித்துகள் தலா 40 சதவீதத்தினர் உள்ளனர். சிறுபான்மை சமூகத்தினர், நாயுடு, செட்டியார் உள்ளிட்ட பிற ஜாதியினர் அனைவரும் சேர்ந்து 20 சதவீதத்தினர் உள்ளனர்.

Sunday, May 17, 2009

தோல்வியே வெற்றியின் முதல் படி!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தோல்வியே வெற்றியின் முதல் படி!



நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்-குர்ஆன்)

நமது தாய்க்கழகமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், நம் முஸ்லிம் சமுதாயத்திற்காக பற்பல இன்னைகளையும், கரடுமுரடான பாதைகள் பலவற்றையும் கடந்து வந்து, கடந்த 14 ஆண்டுகளாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒவ்வொரு துறையிலும் வெற்றி நடை போடுவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

கல்வி விழிப்புணர்வு, பொதுநலசேவைகள், குருதிக்கொடைகள், உரிமைமீட்புப் போராட்டக்களங்கள் என்று நம் சமுதாய முன்னேற்றத்திற்காக நமது கழகம் ஆற்றிய அளப்பறிய தியாகங்களை தற்போது நினைவு கூறுமளவிற்கு எவரும் எளிதில் மறந்து விடக்கூடிய விஷயமன்று. தனது வெற்றிப்பயணங்களின் மற்றொரு மைல்கல்லான முஸ்லிம்களின் தன்னிகரற்ற சக்தியை அரசியல் களத்தில் நிலைநாட்டுவதற்காக, நமது சமுதாயத்தின் நீண்ட நாளைய உள்ளக்குமுறலை அரசியல் களத்திலும் மனிதநேய மக்கள் கட்சியாக பிரதிபளித்தது.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பொருளாதார சிக்கலுக்கிடையில், தமிழக அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், முஸ்லிம்களின் கடந்த காலங்களைப் போல் திராவிடக்கட்சிகளிடம் ஒருசீட்டுக்காக மண்டியிட்டு மடிபிச்சைக் கேட்கும் அளவிற்கு இழிநிலையில் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அல்லாஹ்வின் துணையோடு, நம் சமுதாய அடலேறுகளின் அயராது உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு தனி அரசியில் களம் கண்டோம் - அல்ஹம்துலில்லாஹ்.

காரணம் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு இன்னல் என்றால் அது என் பிணத்தின் மீதுதான் நிகலும் என்ற புளித்துப்போன வீரவசனங்களை இச்சமுதாயம் இனியும் கேட்கத் தயாரில்லை என்பதை உணர்த்துவதற்காகவும்,

சட்டம் இயற்றும் அவைகளில் இடமில்லை என்றாலும் என் சவலைப்பிள்ளைகளுக்கு என் நெஞ்சத்தில் என்றும் இடமுண்டு என்ற பழைய பஞ்சாங்க பசப்பு வார்த்தைகளால் இனி முஸ்லிம்களை கோமாளிகளாக ஆக்கிட முடியாது என்பது நிரூபிப்பதற்காகவும்,

நமது சமுதாயத்தின் தன்மானம் காப்பதற்காக, திமுக, அதிமுக என்ற பணம் மற்றும் படை பலங்கள் பல கொண்ட கூட்டணிகளை எதிர்த்து 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாம் கால் பதித்தோம்.


ஜனநாயத்தை பணநாயகம் ஆட்சி புரியும் நம் தாய்த்திருநாட்டில், 2 மாதங்களில் ஒரு அரசியில் கட்சியை துவங்கி 3வது மாதத்தில் நாடளுமன்றம் செல்வது என்பது எட்டாக்கனி என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில், அராஜகமும் அடக்குமுறைகளும் அரங்கேறிய 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிட்ட நான்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே என்ற எண்ணம் நம் சகோதரர்கள் பலருக்கு சோர்வை அளித்திருக்கலாம். அத்தகைய நல்ல உள்ளங்களுக்கு வல்ல அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்.

அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே முழுமையாக அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:112)

நிச்சயமாக எவர்கள் ''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 46:13)

அன்புச் சகோதரா! ''மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும''; என்ற தாரக மந்திரத்தை இலட்சியமாக உணர்த்தும் மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். நமது இலட்சியம், நமது கொள்கை, நமது இறுதி இலக்கு அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற்று ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் என்ற உயரிய சுவர்க்கத்தை அடைவதுதானே தவிர வேறில்லை. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் கால் பதிப்பதென்பது மக்களுக்கு சேவை செய்யவும், பின்தங்கியுள்ள நம் முஸ்லிம் சமுதாயத்ததை முன்னேற்றப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியே அல்லாமல் வேறில்லை.

அன்புச் சகோதரா! என்று நாம் மனிதநேய மக்கள் கட்சி என்ற தனி அரசியல் களம் கண்டோமோ அன்றே தமிழக முஸ்லிம்கள் திராவிடக்கட்சிகளுக்கு அடிமைகளல்ல என்று நிரூபித்ததில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

பணபலத்திற்கும், படைபலத்திற்கு இந்த சமுதாயம் அடங்கிவிடாது, மாறாக ஃபினிக்ஸ் பறவையை போல மரணத்திலிருந்து எதிர்நீச்சல் போடும் ஆற்றல் நமக்குண்டு என்பதை தமிழக அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்தலில் வெற்றி கண்டிருக்கிறோம்.

பதவி வெறிகொண்ட இத்திராவிடக் கட்சிகள் நம்பிரச்சாரத்தைக் கண்டு தோல்வி பயத்தால் நம்மை பேரம் பேசுமளவிற்கு, நம் சகோதரர்கள் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்துமளவிற்கு நம்மை கண்டு அஞ்சியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

நாம் ஒரு கூட்டணியின் வெற்றிக்காக களம் இறங்கினால் 100 சதவிகித வெற்றிக்காக அவர்களக்காக உழைக்கவும் தெரியும், அதே நேரத்தில் அவர்கள் நம்மை கிள்ளுக் கீரையாக நினைத்தால் அவர்களையே எதிர்த்து களம் காணவும் முடியும் என்பதை உணர்த்தியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் விட மேலாக, நம் சமுதாயம் மேலோங்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுக்காக மட்டுமே, தூய எண்ணத்தோடு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பாடுபட்டதற்கு, அயறாது உழைத்ததற்கு நாளை மறுமையிலே வல்ல அல்லாஹ்விடம் நற்கூலி பெறவிருப்பதை எண்ணித்தான் மிகவும் அகமகிழ்கிறோம்.

அன்புச் சகோதரா! இவ்வுலகில் வெற்றி தோல்லி என்பதெல்லாம் இறைவிசுவாசங்கொண்ட முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு பொருட்டல்ல. நாம் ஒரு விஷயத்தில் தோல்வியடைந்தால் நாம் தவறான நிலையில் இருக்கிறோம் என்பது பொருளல்ல. இதுதான் இஸ்லாம் நமக்குணர்த்தும் உன்னதமான பாடம்.

அல்லாஹ்வின் முழுபாதுகாப்பிலும், வஹியின் தொடர்பிலும் இருந்த அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உஹத் போர்க்களத்தில் தோல்வியடைந்தார்கள், அவர்கள் பற்கள் உடைக்கப்பட்டு அவர்களின் திருமுகம் கோரையாக்கப்பட்டது. இன்னும், இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக 13 ஆண்டுகள் மக்காவில் உழைத்த அண்ணலார் அவர்கள், இஸ்லாமிய அரசையோ, முஸ்லிம்களை பாதுக்ககாக்கும் கட்டமைப்பையோ உருவாக்க முடியவில்லை, இறுதியில் மக்காவை விட்டே அடித்து விரட்டப்பட்டார்கள்.

வெளிப்படையாக தோல்விபோன்று காட்சியளித்த அந்த சம்பவங்களை வைத்துக் கொண்டு இஸ்லாம் தவறான சிந்தாந்தம், முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் தோல்வியடைந்தார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா?(நவ்வூதுபில்லாஹ்). அவைகளெல்லாம் தோல்விகளல்ல. மாறாக பின்னர் வரவிருந்த பல வெற்றிகளை சுவைக்கும் அளவிற்கு முஸ்லிம்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றிய அல்லாஹ்வின் சோதனைகள் அல்லவா அவைகள். இவ்வாறே முஸ்லிம்களாக நாம் பலவகையிலும் சோதிக்கப்படுவோம் என்று வல்ல இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறான்.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நன்மாராயங் கூறுவீராக!. பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 2: 155-157)

முஃமின்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்-குர்ஆன் 3: 186)


மக்களே! தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்பார்கள், நாம் மேற்குறிப்பிட்டது போன்று நாம் அடைந்திருக்கும் பல வெற்றிகளை வருகின்ற சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு படிக்கற்களாக மாற்றுவோம் - இன்ஷா அல்லாஹ். நம் சக முஸ்லிம் சகோதரர்களின் நிந்தனைகளை அலட்சியம் செய்வோம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் சமுதாயமாக இருக்கட்டும். இனி தமிழக அரசியல் அரங்கின் நம் அடுத்த இலக்கு சட்டம் இயற்றும் அவையான தமிழ சட்டமன்றத்தை வெற்றி கொல்வதே. அதற்காக இன்றே உனது பணிகள் தொடரட்டும், வாழ்த்துகிறது மனிதநேய மக்கள் கட்சி.


முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்-குர்ஆன் 3 : 200)

Saturday, May 16, 2009

கலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் த.மு.மு.க. வலியுறுத்தல்.

ஐஸ் அவுஸ் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மனித நேய மக்கள் கட்சியினர் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் தலைமையில் போலீசாரின் மேற்பார்வையிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்தபோது துணை ராணுவ படையினர் எங்கே போனார்கள். இந்த தாக்குதல் ஜனநாயக படுகொலையாகும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யாமல் காவல் தறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்த திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் ரகுபதியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

தாக்குதலை கண்டித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுகவினரின் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற ஆர்பாட்டம்.

மத்திய சென்னை தொகுதியில் கள்ள ஓட்டுப் போடவந்த திமுகவினரை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது காவல் துறை முன்னிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினரின் அராஜகப் போக்கைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.