Monday, May 11, 2009

மத்திய சென்னை தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: கடைசி நாள் பிரசாரத்தில் ஹைதர்அலி பேச்சு

சென்னை, மே. 11- மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலி இன்று காலையில் ஐஸ்அவுஸ், ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடை விடாமல் பிரசாரம் மேற்கொண்டார்.


அப்போது பேசிய அவர்:-

மத்திய சென்னை தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்தால் முன்மாதிரி தொகுதியாக அதனை மாற்றி காட்டுவேன் என்றும், உங்களின் குறைகளுக்காக எந்த நேரத்தில் என்னை அழைத்தாலும் ஓடோடி வருவேன் என்றும் கூறினார்.

முன்னதாக நேற்று வேட்பாளர் ஹைதர்அலிக்கு ஆதரவாக மாநில பொருளாளர் ஆருண்ரஷீத் மோட்டார் சைக்கிள் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இந்த பிரசாரம் திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் பகுதியில் நடந்தது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தைனியா, மாவட்ட செயலாளர் அப்துல்சலாம், பொருளாளர் கோரிமுகமது, ஒருங்கிணைப்பாளர் சீனி முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment