Monday, May 11, 2009

4 தொகுதிகளில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 9 அமைப்புகள் ஆதரவு

சென்னை, மே. 11-மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 9 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்திய தவ்ஹீத்ஜமாத், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம், இந்திய தேசிய லீக், உள்பட 9 அமைப்புகளின் கூட்டமைப்பு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.

கூட்டமைப்பின் தலைவர் அனீபா, முன்னாள் எம்.எல்.ஏ., நிஜாமுதீன், முகமது முனீர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் கூட்டமைப்பின் தலைவர் அனீபா கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளிலும் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது. மற்ற தொகுதிகளில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுப்படி ஒவ்வொரு அமைப்பும் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment