Thursday, April 30, 2009

நக்கீரன்: ம.ம.கவின் தேர்தல் அரசியல்.

நக்கீரன்: ம.ம.கவின் தேர்தல் அரசியல்.
படிப்பதற்கு படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கவும்.

மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு? ம.ம.க. அறிவிப்பு.

மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி போட்டியிடாத தொகுதிகளில் யாருக்கு ஆதரவு?
மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வெளியிடும் அறிக்கை


சமூக ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற இடங்களில் ம.ம.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காக முஸ்லிம் சமுதாயமும், தமுமுக - மமக தொண்டர்களும் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.


மனிதநேய மக்கள் கட்சி சமூக ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் புதிய தமிழகம் கட்சியுடன் இணைந்து இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை, மத்திய சென்னை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியும், தென்காசியில் புதிய தமிழகமும் போட்டியிடுகின்றன.


இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சி போட்டியிடும் இடங்கள் தவிர மற்ற இடங்களில் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தமுமுக தலைமையகத்திற்கு நேரில் வந்து ஆதரவு கோரினர்.


முஸ்லிம் சமூகத்தின் வாக்கு பலத்தையும், மனிதநேய மக்கள் கட்சி ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களிடம் பெற்றிருக்கும் ஆதரவையும் அரசியல் கட்சிகள் உணர வேண்டும், சமுதாயத்தின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தேர்தலில் களம் கண்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை நமது சமுதாயத்தை உதாசீனப்படுத்திய திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதேபோல மதவாத பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியடைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாம் மற்ற தொகுதிகளில் நமது ஆதரவை வழங்க வேண்டியுள்ளது.


நமது பலத்தை உணர்ந்து சமுதாயத்தில் நமது கட்சிக்கு இருக்கும் வாக்கு வலிமையை அறிந்து நம்மிடம் நேரில் வந்து ஆதரவு கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை அவர்கள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்கும். ஆனால் இது ஆதரவு மட்டும்தான், களத்தில் இறங்கி வேலை செய்வது, வெற்றிபெற உழைப்பது என்பது அர்த்தமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் தென்காசியில் நமது கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் போட்டியிடுவதால் அங்கு போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு இல்லை.


திமுக, அதிமுக, பாஜக நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகளிலும் இதேபோல் காங்கிரஸ், அதிமுக, பாஜக போட்டியிடும் தொகுதிகளிலும் அந்த கட்சிகளைத் தவிர வேறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கோ அல்லது நற்பண்பு கொண்ட வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கு மாறு ம.ம.க. கேட்டுக் கொள்கிறது.


இதுதான் பாராளுமன்றத் தேர்தலில் நமது நிலைப் பாடாகும். பரவலான வாக்கு வங்கி இருந்தும் பொருளாதார பலமின்மையால் ஒருசில தொகுதிகளில் மட்டுமே நாம் போட்டியிடும் சூழல் உள்ளதால் நாம் போட்டியிடும் தொகுதிகளில் கடுமையாக உழைக்கவும், கவனம் செலுத்தவும் வேண்டியிருப்பதால் மற்ற தொகுதிகளில் நாம் இதுபோன்ற நிலைப்பாடுகள் எடுப்பது தவிர்க்க முடியாதது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் நமக்கு நேர்வழி காட்டப் போதுமானவன்.

புதுப்பேட்டையில் பிரச்சாரம் செய்த மத்திய சென்னை வேட்பாளருக்கு மலர் தூவி வரவேற்பு.

மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செ. ஹைதர் அலி புதுப்பேட்டையில் பிரச்சாரம் செய்தபோது மலர் தூவி வரவேற்ற காட்சி.

Wednesday, April 29, 2009

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் பிரச்சாரம்.

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் முதுகுளத்தூரில் பிரச்சாரம்.

மயிலாடுதுறை ம.ம.க வேட்பாளர் தீவிர வாக்குச் சேகரிப்பு.

மயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் தீவிர வாக்குச் சேகரிப்பு.
வீதி வீதியாக வீடுகள் தோரும்...


பொதுமக்களிடம்.

சகோதர சமுதாய தலைவர்களிடம்

உழைப்பாளிகளிடம்.


மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் கேசரிப்பு...

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் கேசரிப்பு...

ஜமாத்தார்களுடன் சந்திப்பு


பொதுமக்களிடம் பிரச்சாரம்.


/

Tuesday, April 28, 2009

மனிதநேய மக்கள் கட்சிக்கு “ரெயில் என்ஜின்” சின்னம்: 4 வேட்பாளர்களும் ஒரே சின்னத்தில் போட்டி

மனிதநேய மக்கள் கட்சிக்கு “ரெயில் என்ஜின்” சின்னம்:
4 வேட்பாளர்களும் ஒரே சின்னத்தில் போட்டி

ஏப்: 28. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரத்தால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், இந்திய தவ்கீத் ஜமாத், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். மனித நேய மக்கள் கட்சி மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாட்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மயிலாடுதுறையில் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் ஹைதர்அலி, ராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ்கான், பொள்ளாட்சியில் உமர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள 4 வேட்பாளர்களும் தங்களுக்கு ரெயில் என்ஜின் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். இதன்படி இவர்கள் அனைவருக்கும் ரெயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் ஹைதர் அலி நேற்று ரெயில் என்ஜின் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

திருவல்லிக்கேணி பகுதியில் எல்லிஸ்.ரோடு, பைகிராஸ்ரோடு, பெல்ஸ் ரோடு, திருவல்லிக் கேணி நெடஞ்சாலை, அபுல்ஹசன் ரோடு, பார்டர் தோட்டம், பெரிய தெரு, பார்த்தசாரதி ரோடு மற்றும் சேப்பாக்க பகுதிகளிலும் ரெயில் என்ஜின் சின்னத்தை காட்டி ஹைதர்அலி ஓட்டு கேட்டார்.

திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நாசர் உமரி, த.மு.மு.க. பொருளாளர் ரகமதுல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்துல்சலாம், த.மு.மு.க. மாவட்ட தலைவர் சீனிமுகமது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நேற்று காலையில் மட்டும் திருவல்லிக்கேணி பகுதியில் 20 கிறிஸ்தவ பாதிரியார்களை சந்தித்து ஹைதர் அலி ஆதரவு திரட்டியது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களுக்கு துரோகம்: மகள் திருமணத்துக்கு, ராஜபக்சேவை அழைத்து விருந்து கொடுத்தவர், மணிசங்கர் அய்யர். ம.ம.க வேட்பாளர் குற்றச்சாட்டு

தமிழக மக்களுக்கு துரோகம்: மகள் திருமணத்துக்கு, ராஜபக்சேவை அழைத்து விருந்து கொடுத்தவர், மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லா, சீர்காழி வடகாலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் படுகொலை உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. ராஜபக்சே அரசு ஈவு இரக்கமின்றி ரசாயன குண்டுகளை பயன்படுத்தி ஈழத்தமிழர் இனத்தை கொன்று குவித்து வருகிறது. தற்போது அறிவித்துள்ள இலங்கை ராணுவ போர் நிறுத்தம் நாடகமாகும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ராஜபக்சே செய்து வருவது போர் குற்றமாகும்.

ஈராக்கில் ரசாயன குண்டுகளை பயன்படுத்தி குர்து இன மக்களை கொன்று குவித்தவர் ஈராக் அதிபர் சதாம் உசேன். இதனால் குற்றம் சாட்டப்பட்டு சதாம்உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதே போல் சற்றும் குறையாத வகையில் ராஜபச்சே தமிழர் இன மக்களை கொன்றுள்ளார்.

எனவே ராஜ்பக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இலங்கை ராணுவ போர் நிறுத்தம் என்பது காலம் கடந்த ஞான உதயமாகும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றதாகும். தற்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது மகள் திருமணத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்து வந்து விருந்து கொடுத்தவர்தான் மணி சங்கர் அய்யர். எனவே தமிழ் மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை தொகுதி மக்கள் மறக்க மாட்டார்கள்.

இலங்கை பிரச்சினையில் இதுவரை மவுனம் காட்டிய அ.தி.மு.க.வையும் இத்தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா பேசினார்.


பேட்டியின் போது மனித நேய கட்சி நிர்வாகிகள் முகமது இர்பான், முசாவூதீன், முகமது ஜுனபர், அசரப் அலி உள்பட பலர் இருந்தனர்.

மத்திய சென்னை வேட்பாளர் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் வாக்குசேகரிப்பு

மத்திய சென்னை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் வாக்குசேகரித்தபோது....

Monday, April 27, 2009

மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் சின்னம்

மனிதநேய மக்கள் கட்சியின் சின்னமாக ரயில் என்ஜினை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.


மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் மத்திய ‍சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியின் சின்னமாக பயன்படுத்தப்படும்

அயனாவரம் பகுதியில் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்யும் மத்திய சென்னை வேட்பாளர்.

மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அயனாவரம் பகுதியில் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்யும் காட்சி.

நன்றி: மாலை மலர் 26-04-2009

Sunday, April 26, 2009

மயிலாடுதுறை வேட்பாளர் அறிமுகக்கூட்டம்

மயிலாடுதுறை வேட்பாளர் அறிமுகக்கூட்டம்



மனித நேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் பேரா.முனைவர் ஜவாஹிருல்லஹ் அவர்களின் அறிமுக கூட்டம் 25.04.09 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லாஹ்,,ம.ம,க துணை பொது செயலாளர் அன்சாரி, சகோ. திருவள்ளுவன், T.S.S மணி, ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் பேசிய ஜவாஹிருல்லாஹ் தான் வெற்றி பெற்றால் தொகுதியிலேயே தங்கி இருந்து மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் என்றார். இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை வேட்பாளர் துறைமுகம் பகுதியில் வாக்குச் சேகரிப்பு.

மத்திய சென்னை வேட்பாளர் துறைமுகம் பகுதியில் வாக்குச் சேகரிப்பு.

ம.ம.க மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலி இன்று 26.04.09 துறைமுகம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.அப்போது பொது மக்களிடம் பேசி வாக்கு சேகரித்த காட்சிகள்.

Saturday, April 25, 2009

மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார் அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.


மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை மகளிர் அணி செயல் வீரர்கள் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை மகளிர் அணி செயல் வீரர்கள் கூட்டம்

சென்னை, ஏப்.23- மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை மகளிர் அணி செயல் வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி, மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, வட சென்னை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் அப்துல் ஹமீது தென்சென்னை மாவட்ட தலைவர் சீனி முஹமது மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலியின் வெற்றிக்கு பாடுபடுவது என்றும் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பெண்களையும் பொதுமக்களையும் சந்தித்து வாக்கு சேகரிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரிய கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரம்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் மத்திய சென்னையில் ஓட்டு சேகரிப்பு

நன்றி: தினமலர்
ஏப்ரல் 22,2009,23:26 IST

சென்னை : மத்திய சென்னை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர்அலி போட்டியிடுகிறார்.

புகைப்படம் மாலைமலரில் வந்தது.

புதிய அரசியல் கட்சியாக இருந்தாலும், பெரிய கட்சிகளுக்குச் சவால் விடும் வகையில் இந்தக் கட்சி தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

ஹைதர்அலி, மனு தாக்கல் செய்யத் துவங்குவதற்கு முன்பிருந்தே தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். தொகுதிக்குள் பம்பரமாகச் சுழன்று வரும் இவர், நேற்று துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 26, 27, 28, 29 ஆகிய வார்டு பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். கடந்த சில தினங்களாக இவர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அந்த வகையில், ஆற்காடு நவாப், எஸ்றா சற்குணம், நாடர் சங்கம், வணிகர் சங்கம், பல் வேறு ஜமாத் அமைப்பின் பிரதிநிதிகள், கோடம் பாக்கம் பிராமணர் சங்கம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

நேரில் சென்று மக்கள் குறை தீர்ப்பேன் மத்திய சென்னை வேட்பாளர் வாக்குறுதி

நேரில் சென்று மக்கள் குறை தீர்ப்பேன் மத்திய சென்னை வேட்பாளர் வாக்குறுதி

மயிலாடுதுறை ம.ம.க வேட்பாளர் கும்பகோண் பிஷப்பிடம் ஆதரவு கேட்டார்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் கும்பகோணம் பிஷப்பிடம் ஆதரவு கேட்டார்


கும்பகோணம்,ஏப்.25
மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவா ருல்லா குடந்தை மறை மாவட்ட ஆயரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பிஷப்பிடம் ஆதரவு
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட் பாளரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவருமான ஜவாருல்லாஹ் தனது கட்சி யினருடன் நேற்று கும்பகோணம் பிஷப் ஹவுஸில் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமியை நேரில் சந்தித்து தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் பிஷப் பிடம் ஆலோசனை நடத்திய அவரிடம் பிஷப் அந்தோணி சாமி, பல நல்ல காரியங்களை செய்ய நாங்கள் எப்போதும் ஒத்துழைப்பு நல்குவோம் என்று தெரிவித்தார்.

10 கட்டளைகள்
அவரிடம் த.மு.மு.க சார்பில் இஸ்லாமிய மக்களுக்கு செய்துள்ள தொண்டுகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அந்தோணிசாமி கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் சார்பில், வாக்காளர்களுக்கு பத்து கட்டளைகள் என்று தயாரிக் கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை ஜவருல்லாவிடம் பிஷப் வழங்கினார்.

கிறிஸ்தவர்களிடம் வரவேற்பு
பின்னர் நிருபர்களிடம் ஜவாருல்லா கூறிதாவது:
மயிலாடுதுறை பாராளு மன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் நான் போட்டியிடுகிறேன்.

த.மு.மு.க.வினர் பேராதர வோடு தொடங்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி 15வது நாடாளுமன்ற தேர்தலில் புதியதமிழகம், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடுகிறது. சமூக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவு தந்துள்ளது. சிறுபான்மையினர் அரசியலில் சுயமுகவரியுடன் வருவதை கட்சிகள் விரும்பாததால், செயல்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளோம். மயிலாடுதுறை தொகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற் சாலைகளை அமைப்பேன். சிறு சிறு அணைக்கட்டுகள் ஏற்படுத்தி ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்கு பாடுபடுவேன். தரமான கல்லூரிகள், மருத்துவக்கல்லூரி அமைக்க பாடுபடுவேன். மனித நேய மக்கள் கூட்டணிக்கு கிறிஸ்தவர்கள் அமைப்பிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரு கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தியாகிகள் கோரிக்கை
பின்னர் ஜவாருல்லாஹ் பட்டீஸ்வரத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் நலச் சங்கத்திற்கு சென்று தியாகி களிடம், அவர்களது கோரிக் கைகள் பற்றி கேட்டறிந்து, அவர்களிடம் ஆதரவு திரட்டினார். தியாகிகள் நலச் சங்கத்தின் மாவட்டதலைவர் கணேசபஞ்சாபிகேசன் மற்றும் தியாகிகள் ஜவாஹிருல்லாவிடம் 8 அம்ச கோரிக்கைகள் பற்றி எடுத் துரைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற தான் பாடுபடுவதாக தியாகிகளிடம் ஜவாஹிருல்லா உறுதி அளித்தார்.
மாநில மாணவரனி செயலாளர் அமீன், மாவட்ட செயலாளர் முகமது சுல்தான், உமர் ஜஹாங்கீர், த.மு.மு.க. மாவட்ட தலைவர் முகமது செல்லப்பா, மாவட்ட செயலாளர் கனி, மக்கள் தொடர்பு அலுவலர் சலீம் உள்பட பலர் ஜவாருல்லாவுடன் சென்றனர்.
நன்றி: தின்த்தந்தி 25-4-2009

அன்று ஓட, ஓட அடித்து விரட்டப்பட்ட இன்றைய மத்திய சென்னை ம.ம.க. வேட்பாளர்

1999 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது இன்று மத்திய சென்னையில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலி அவர்களுடன் சேர்ந்து களப்பணியாற்றிய சகோதரர் அபூ சுமையா அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் கருத்து பதிவு பகுதியில் பதிவு செய்துள்ள தகவலை நன்றியுடன் பதிவு செய்திள்ளேன்.
Blog Editor
____________________________________________________________________

இன்று மத்திய சென்னை தொகுதியில் சகோ. ஹைதர் அலி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்களில் திமுக வேட்பாளர் மட்டுமே அவர் கண்ணுக்கு எதிரியாக தெரியும்; தெரிய வேண்டும். சகோதரர் ஹைதர் அலி, எப்படிப்பட்ட மோசமானவராக இருந்தாலும் சகோதரர் பிஜேக்கு எவ்வளவு பெரிய துரோகம் இழைத்திருந்தாலும்...... தேர்தல் என்று வரும் போது, அதுவும் மத்திய சென்னை தொகுதி என்று வரும் போது, அதிலும் சகோ. ஹைதர் அலி போட்டியிடுகிறார் என வரும் போது சகோதரர் பிஜே கொஞ்சமாவது நன்றியுள்ளவராக இருந்தால்......... சகோ. ஹைதர் அலி வெற்றி பெற தன் ஆதரவைக் கொடுத்து, வீதியில் இறங்கி உழைக்க வேண்டும்.

இதற்கான காரணம் ஒன்று உள்ளது. அதில், நேரடியாக நான் தொடர்பு கொண்டவன் என்பதால், அல்லாஹ்வுக்காக இவ்விடத்தில் அதனை நினைவுகூர கடமைபட்டுள்ளேன்.

1999 பாராளுமன்ற தேர்தல் என நினைக்கிறேன். அத்தேர்தலில் துரோகி கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைத்து களம் கண்டார். இதன் காரணமாக அப்போது பிஜே உடனிருந்த தமுமுக பாப்பாத்தி செயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் முஸ்லிம்களை வெற்றி பெற வைக்க முழு மூச்சாக இறங்கி வேலை செய்ய வேண்டும் என தீர்மானம் போட்டு களமிறங்கியிருந்தது.

இதே மத்திய சென்னை தொகுதியில் அப்பொழுது அதிமுக சார்பில் சகோ. லத்தீப் சாகிப் அவர்கள் போட்டியிட்டார்கள். சென்னை திமுகவின் கோட்டை என்பதாலும் அப்பொழுது திமுக ஆட்சியில் இருந்ததாலும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாலும் கள்ள ஓட்டு கொடிகட்டிப் பறக்கும் எனவும் கள்ள ஓட்டை மட்டும் நாம் தடுத்து விட்டாலே சகோ. லத்தீப் அவர்களின் வெற்றியை உறுதிபடுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கள்ள ஓட்டு நடக்காமல் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் தமுமுகவினர் உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, எல்லா வாக்கு சாவடியிலும் தமுமுக தொண்டர்கள் ஒவ்வொரு தலைவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டனர்.

இப்பணிக்காக சகோதரர்கள் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும் என பீஜே பேசிய பேச்சைக் கேட்டு, அரசியலில் எவ்வித நாட்டமும் இல்லாத நானும் தேர்தல் பணிக்காக தமுமுக சகோதரர்களுடன் களமிறங்கியிருந்தேன்.

இதே மத்திய சென்னை தொகுதியில், அண்ணா நகர் பகுதியிலுள்ள ஒரு அரசு மேல் நிலைபள்ளியில், இப்பொழுது இதே மத்திய சென்னையில் போட்டியிடும் சகோதரர் ஹைதர் அலி தலைமையில் நான் உட்பட சில சகோதரர்களுக்குக் கள்ள ஓட்டு நடைபெறாமல் கண்காணிக்க தமுமுக பொறுப்பு தந்திருந்தது.

கள்ள ஓட்டு நடப்பது தெரிய வந்தால் எவ்விதம் யார், யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருந்தன.

அப்போதைய தேர்தல், தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்றன. அது இரண்டாம் கட்ட தேர்தல். முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருந்த கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளிலிருந்து சுமார் 20க்கு மேற்பட்ட ஸ்டாண்டர்ட் வேன்களும் சுமார் 10க்கு மேற்பட்ட பஸ்களும் அண்ணாநகர் வாக்குச்சாவடி பகுதிகளில் பார்க் செய்யப்பட்டிருந்ததையும் பூத்தினுள் அதிகாரிகளின் துணையுடன் முழு பூத்தையுமே திமுக+பாஜகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டுக் கொண்டிருந்ததையும் திமுக+பாஜகவினர் அல்லாத வேறு யாரையுமே ஓட்டு போட விடாமல், உரிய அடையாள அட்டைகள்/ரேசன் கார்டுகள் இருந்தும் அதிகாரிகளை வைத்து அவர்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றும் ஓட்டு போட்டாகி விட்டது என்றும் விரட்டப்பட்டுக் கொண்டிருந்ததையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் கண்டறிந்தோம்.

எங்களுக்குத் தரப்பட்டிருந்த அறிவுரைபடி உடனடியாக தகவலைச் சகோதரர் ஹைதர் அலிக்குக் கைப்பேசியில் தொடர்பு கொண்டு சொன்னோம்.

சம்பவ இடத்திற்கு நாங்கள் கூறியது சரிதானா? என்பதைச் சோதிப்பதற்காக விரைந்து வந்தச் சகோதரர் ஹைதர் அலி அவர்கள், நாங்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பதைக் கண்டவுடன் பூத் தேர்தல் அதிகாரியிடம் அப்போது அங்கு திரண்டிருந்த(ஓட்டு போட விடமால் தடுக்கப்பட்ட கோபத்தில் இருந்த) அதிமுகவினர் புடைசூழ வாக்குவாதம் செய்தார்.

வெறும் 5 நிமிடம் தான் ஆகியிருக்கும். எங்கிருந்து அத்தனை பெரிய கூட்டம் வந்தது என்று தெரியாது. சுமார் 2000 பேருக்குக் குறையாமல் இருப்பர். சகோதரர் ஹைதர் அலியோடு இணைத்து நாங்கள் துரத்தி், துரத்தி அடிக்கப்பட்டோம். தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது சகோ. ஹைதர் அலிக்கு ஆதரவாக திரண்டிருந்த அதிமுகவினரில் ஒருவரைக் கூட அந்த இடத்தில் காணோம். தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த நாங்களும் சகோதரர் ஹைதர் அலியும் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் விரட்டி அடிக்கப்பட்டோம். அந்நேரத்தில், சகோ. ஹைதர் அலிக்குப் பாதுகாப்பாக அரசாங்கம் ஏகே47 துப்பாக்கியுடன் ஒருவரை நியமித்திருந்தது. கூட்டத்தின் அடி பொறுக்க முடியாமல், பாதுகாப்புக்கு வந்திருந்தவரிடம் வானத்தை நோக்கிச் சுட சகோ. ஹைதர் அலி பலமுறை வேண்டுகோள் விடுத்தார். ம்ஹூம். துரோகி கருணாநிதி நியமித்த ஆளல்லவா??.. சிறிது நேரத்தில் அவனும் எங்கு சென்றான் என்பது தெரியவில்லை.

அன்று நாங்கள் அடி வாங்கிக் கொண்டு ஓடிய ஓட்டம், 10 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் பசுமையாக மனதில் உள்ளது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி, வழியில் கண்ட ஒரு டாக்டரின் காரை மறித்து ஏறி, பின்னர் சிறிது தூரம் சென்று வேறு ஆட்டோ பிடித்தூ....எப்படியோ எம்.எல்.ஏ ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். அங்கு அறையினுள் சகோ. லத்தீப் தலைமையில் தலைவர்கள் தேர்தல் நிலவரம் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

நடந்தச் சம்பவத்தைச் சகோ. லத்தீப் சாகிப்பிடம் தெரிவித்ததும், உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும், உங்கள் தலைவரிடம் பேசி சொல்லுங்கள் என்றார்.

சகோ. ஹைதர் அலி , சகோ. பிஜேயை அழைத்துத் தகவல் கூறி, உடனடியாக கருணாநிதி வீட்டை முற்றுகை இடும் போராட்டம் அறிவித்து, தொண்டர்களை அங்கு வர வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் முறைபடி நடைபெறாததை மத்திய அரசுக்கும் தேர்தல் கமிசனுக்கும் கொண்டு செல்ல இதுவே உகந்த வழி என்றும் போராட்டம் அறிவித்தால் எதிர்கட்சிகளும் உடன் இறங்கும் என்றும் கூறினார்.

'தற்போது நமக்குக் கிடைக்கும் தகவல்படி சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சகோ. லத்தீப் வெற்றிபெறுவது உறுதி(அத்தேர்தலில் சுமார் ஒரு இலட்சம் என நினைக்கிறேன், வாக்கு வித்தியாசத்தில் சகோ. லத்தீப் தோல்வியடைந்தார்) என்றும் நாம் இப்போது அவ்வாறான போராட்டம் ஒன்று நடத்தினால் மத்திய சென்னை தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம் என்றும் அது நமக்குத் தான் இழப்பை ஏற்படுத்தும் என்றும் எனவே, சமுதாய நலனுக்காக நாம் வாங்கிய அடியைப் பொறுத்துக் கொள்வோம். வெற்றி பெற்றபின் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் அலுவலகம் திரும்புங்கள்' என சகோ. பிஜேயிடமிருந்து பதில் கிடைத்தது.

களத்தின் நிலவரம் என்ன என்பதை அறியாமல் அவரே ஒரு கற்பனை உலகிலிருந்து கொண்டு இப்படி தீர்மானம் எடுக்கிறாரே என மனம் நொந்து சகோ. ஹைதர் அலி தளர்ந்து போய் அமர்ந்தார்.

அப்பொழுது அவர் கூறிய ஒரு வாசகம்:

'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது தவறாகி விட்டது!'

அன்று இறைவன் பாக்கியத்தால் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று தான் சொல்ல வேண்டும். ஹைதர் அலியுடன் நாங்கள் பெற்றிருந்த அடியினைக் கண்டிருந்த சகோ. ஹைதர் அலி, அலுவலகத்தில் கூறி எங்களுக்கு மருத்துவ சிகிட்சைக்கு ஏற்பாடு செய்து தரக் கூறி, அதனையாவது செய்யுங்கள் என்றிருந்தார்.

இப்படிப்பட்ட சகோ. ஹைதர் அலி மற்றும் ஜவாஹிருல்லாஹ்வைத் தான் இதே சகோ. பிஜே, தனது 'மனம் திறந்த மடலில்' , தன்னலம் பாராமல் உழைக்கும் சேவகர்கள் என்றும் சிறைக்குச் செல்லவும் அடியும் உதையும் கொள்ள தயாரானவர்கள் என்றும் இவர்களைச் சமுதாயம் முழுக்க நம்பலாம் என்றும் ஒருமுறை வானளாவ புகழ்ந்திருந்தார்.

இதனை எல்லாம் நான் இங்கு எடுத்துக் கூற நான் ஒன்றும் தமுமுகவோ அல்லது மமக அனுதாபியோ அல்ல. அன்று தேர்தல் பணிக்குச் சென்றதும் தமுமுகவுக்காக அல்ல. பிஜே அன்று அங்கு இருந்ததால் தான் அவரின் அழைப்புக்குச் செவி சாய்த்துத் தேர்தல் பணியாற்றச் சென்றேன். இதனைப் படிப்பவர்கள் நான் தமுமுகவிற்கு அனுதாபம் தேட இதனைக் கூறுவதாக நினைக்கலாம்.

எல்லாம் இறைவன் அறிவான். நான் நேரடியாக அனுபவப்பட்ட இந்தச் சம்பவத்தில், அன்று ரோட்டில் சமுதாயத்துக்காக ஓட, ஓட அடித்து விரட்டப்பட்டவர் தான் இன்று அதே மத்திய சென்னையில் போட்டியிடுகிறார்.

சகோ. பிஜே நன்றாக மனதில் கை வைத்து யோசிக்கட்டும். நாளை மறுமையில் இதற்கான சாட்சியாக நான் நிற்பேன்.

அன்று பிஜே சொல் கேட்டு அடி வாங்கியவருக்குத் தார்மீக ஆதரவு கொடுக்கச் சகோ. பிஜே கடமைபட்டுள்ளார். சமுதாய நன்மைக்காகத் தான் துரோகி கருணாநிதியை ஆதரிக்கிறோம் என கதையளக்கும் சகோ. பிஜே, தான் எதிர்த்து பிரச்சாரம் செய்யப்போகும் சகோதரர் ஒருகாலத்தில் தன் பேச்சைக் கேட்டு சமுதாயத்துக்காக இன்று தான் ஆதரிக்கும் கருணாநிதி+பாஜக கூட்டத்தால் அடி வாங்கியவர் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளட்டும்!

(இங்கு நான் குறிப்பிட்டுள்ள விஷயம் பொய் என எந்தத் ததஜ அனுதாபியாவது மாமிசம் உண்ண வருவாரானால், வருவதற்கு முன்னர் ஒருமுறையாவது சகோ. பிஜே அவர்களிடம் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறி உண்மையா?? இல்லையா? என்பதைக் கேட்டு விட்டு வரவும்)

--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)

Thursday, April 23, 2009

இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

இரமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் S.சலிமுல்லாகான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு.

இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் எஸ்..சலிமுல்லாகான் அவர்கள் முதுகுளத்தூர் ஒண்றியம் கிருஸ்ணாபுரம், தணிச்சியம், ஒடைக்குளம், கிடாரம், மாரியுர், உப்பிலான், பேரையுர், முதுகுளத்தூர், முஸ்தபாபுரம், காக்கூர், தேரிருவேலி, காரையேந்தல் ஆகிய ஊர்களில் ஜமாத்துகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்குகள் சேகரித்தார். இவர்களுடன் கோவை.செய்யது (மாநில பேச்சாளர்) மற்றும் O.U.ரஹ்மத்துல்லா (மாநில பொருளாளர் த.மு.மு.க) மற்றும் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு.

வேட்பாளர் சலிமுல்லாகான் அவர்கள் பேசும்போது சாலை வசதி , மின்சார வசதி, குடிதண்ணிர் மற்றும் மருத்துவ வசதி செய்துகொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இக்கூட்டத்திற்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சமூக ஜனநாயக முன்னணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு

சமூக ஜனநாயக முன்னணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு

16-04-2009 அன்று சென்னையில் வருகின்ற தேர்தலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு யாருக்கு என்பது பற்றிய பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அரசியலில் தனி அதிகாரம் பெற வேண்டும் என்ற சிறந்த நோக்கத்துடன் மனித நேய மக்கள் கட்சி களம் இறங்கியது. சுய மரியாதையுடனும், தனித்துவமாகவும் செயல்படும் விதமாக எடுக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முயற்சியை கொச்சைப்படுத்தும் விதமாக இரு திராவிடக் கட்சிகளும் நடந்து கொண்டது வேதனைக்குரியது.

எனவே புதிதாக உருவாகி இருக்கும் சமூக ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பது எங்கள் கடமை.


அதன்படி மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி, மத்திய சென்னை, திருச்சி, தென்காசி, தூத்துக்குடி, ஆகிய 7 தொகுதிகளில் மட்டும் சமூக ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரிக்கிறோம் என்றார் இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பார்க்கர்.

இச்சந்திப்பில் துணைத்தலைவர் முனீர், துணைப்பொதுச் செயலாளர் இக்பால், வர்த்தக செயலாளர் பிர்தௌஸ், செயலாளர் ஷிப்லி உள்ளிட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் சலீமுல்லாஹ் கான் பிரச்சார விபரம்.

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் சலீமுல்லாஹ் கான் பிரச்சார விபரம்.

12-04-2009 திருவாடணை- ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்கப்பட்டது.

13-04-2009 புதுவலசை, சின்னக்கடை மீண்காரதெரு, பாசிபட்டரை தெரு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கோரினார். ஜமாத் நிர்வாகம் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆதரவு தருவதாக உறுதிஅளித்துள்ளார்.

14-04-2009 அத்தியுத்துஇஆற்றாங்கரை ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஓட்டு பொடுவதாக வாக்களித்தனர்

15-04-2009 மாநில நிர்வாகிகளின் சந்திப்பு .

16-04-2009 பெரிய பட்டிணம், ரெகுநாதபுரம் , வண்ணாங்குண்டு புளியங்குடி செய்யது அவர்களின் உரை-பெரியபட்டிணம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எழுச்சியும் வரவேற்பும் காணப்பட்டது.

17-04-2009 ஈசா பள்ளிவாசல். ஜமாத், ஜும்மா உரை பொட்டகவயல் ஜமாத்-அஸர் தொழுகை சித்தார்கோட்டை –மஹரிஃப் தொழுகை வாமூர் - இஸா தொழுகை ஜமாத் நிர்வாகிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர்கலந்துகொண்டனர்

18-04-2009 காலை 10 மணி அளவில் மமக – புதிய தமிழகம் - லீக் தொண்டர்களின் செயல்வீரர்கள் கூட்டம் - மதியம் 2.30 மணி அளவில் நாமினேசன் தாக்கல் செய்யபட்டது. சுமார் 2000 க்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். புதிய தமிழகம் கட்சியின் மாநில –மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

19-04-2009 தங்கச்சிமடம்-பாம்பன்-இராமேஸ்வரம்-மற்றும் மரைக்காயர்பட்டிணம் ஜமாத் நிர்வாகிகளையும் சங்கத்தினர்களையும் சந்தித்து வாக்குசேகரித்தானர். ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த எழுச்சியும் வரவேற்பும் காணப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் களப்பணி தொடரும்...

Wednesday, April 22, 2009

Tuesday, April 21, 2009

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்

மயிலாடுதுறை, ஏப். 21: மயிலாடு துறை மக்களவைத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம். எச்.ஜவாஹிருல்லாஹ் செவ்வாய்க்கிழமை வேட் பு மனு தாக்கல் செய்தார்.

ம னித நேய மக்கள் கட் சியி ன் மாநில ஒருங்கிணைப்பாளர் எம். எச்.ஜவாஹி ருல்லாஹ், மயிலாடுதுறை சார் ஆட்சி யர் அஜய்யாதவி டம் செவ்வாய்க் கி ழமை தனது வேட் பு மனுவைத் தாக்கல் செய்தார்.

சொத்து ம தி ப் பு : அசையும், அசையா சொத்துகள், நகைகள், பணம் கை யி ருப் பு உள்ளிட்டவை என ரூ. 77 லட் சம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பி ட்டுள்ளார்.