Thursday, April 23, 2009

சமூக ஜனநாயக முன்னணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு

சமூக ஜனநாயக முன்னணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு

16-04-2009 அன்று சென்னையில் வருகின்ற தேர்தலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு யாருக்கு என்பது பற்றிய பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அரசியலில் தனி அதிகாரம் பெற வேண்டும் என்ற சிறந்த நோக்கத்துடன் மனித நேய மக்கள் கட்சி களம் இறங்கியது. சுய மரியாதையுடனும், தனித்துவமாகவும் செயல்படும் விதமாக எடுக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் முயற்சியை கொச்சைப்படுத்தும் விதமாக இரு திராவிடக் கட்சிகளும் நடந்து கொண்டது வேதனைக்குரியது.

எனவே புதிதாக உருவாகி இருக்கும் சமூக ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பது எங்கள் கடமை.


அதன்படி மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி, மத்திய சென்னை, திருச்சி, தென்காசி, தூத்துக்குடி, ஆகிய 7 தொகுதிகளில் மட்டும் சமூக ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரிக்கிறோம் என்றார் இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பார்க்கர்.

இச்சந்திப்பில் துணைத்தலைவர் முனீர், துணைப்பொதுச் செயலாளர் இக்பால், வர்த்தக செயலாளர் பிர்தௌஸ், செயலாளர் ஷிப்லி உள்ளிட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment