Saturday, April 25, 2009

பெரிய கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரம்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் மத்திய சென்னையில் ஓட்டு சேகரிப்பு

நன்றி: தினமலர்
ஏப்ரல் 22,2009,23:26 IST

சென்னை : மத்திய சென்னை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர்அலி போட்டியிடுகிறார்.

புகைப்படம் மாலைமலரில் வந்தது.

புதிய அரசியல் கட்சியாக இருந்தாலும், பெரிய கட்சிகளுக்குச் சவால் விடும் வகையில் இந்தக் கட்சி தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

ஹைதர்அலி, மனு தாக்கல் செய்யத் துவங்குவதற்கு முன்பிருந்தே தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். தொகுதிக்குள் பம்பரமாகச் சுழன்று வரும் இவர், நேற்று துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 26, 27, 28, 29 ஆகிய வார்டு பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். கடந்த சில தினங்களாக இவர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அந்த வகையில், ஆற்காடு நவாப், எஸ்றா சற்குணம், நாடர் சங்கம், வணிகர் சங்கம், பல் வேறு ஜமாத் அமைப்பின் பிரதிநிதிகள், கோடம் பாக்கம் பிராமணர் சங்கம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

No comments:

Post a Comment