Showing posts with label த.மு.மு.க. Show all posts
Showing posts with label த.மு.மு.க. Show all posts

Saturday, May 16, 2009

கலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் த.மு.மு.க. வலியுறுத்தல்.

ஐஸ் அவுஸ் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மனித நேய மக்கள் கட்சியினர் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் தலைமையில் போலீசாரின் மேற்பார்வையிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்தபோது துணை ராணுவ படையினர் எங்கே போனார்கள். இந்த தாக்குதல் ஜனநாயக படுகொலையாகும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யாமல் காவல் தறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்த திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் ரகுபதியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

தாக்குதலை கண்டித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, May 8, 2009

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் விபத்தில் சிக்கினர். 2 பேருக்கு காயம்!

மயிலாடுதுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் விபத்தில் சிக்கினர். 2 பேருக்கு காயம்!


மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக ம.ம.க., த.மு.மு.க., தொண்டர்கள் உற்சாகத்தோடு களப்பணி ஆற்றி வருகின்றனர். இன்று நோட்டீஸ் வினியோகம் செய்வதற்காக துண்டு பிரசுரங்களோடு 4 மணி அளவில் ம.ம.க சகோதரர்கள் ஆட்டோவில் கும்பகோணத்திலிருந்து சோழபுரம் சென்று கொண்டிருந்தனர். மாணிக்க நாச்சியார் கோவில் என்ற இடமருகே சென்று கொண்டிருதபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் ஆட்டோவில் இருந்த சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சோழபுரத்தை சேர்ந்த தஞ்சை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோ. யாசர் என்பவரின் கால் நரம்பு துண்டாகி பெரும் காயம் ஏற்பட்டது. சோழபுரம் கிளை த.மு.மு.க செயலாளர் பக்ருதீனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.


தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தமுமுகவினர் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றர்.


சகோ. யாசர் ஏற்கெனவே ஒரு கால் ஊனமானவர் அவருக்கு தற்போது மற்றொரு காலிலும் அடிபட்டதால் 5 மணிநேரம் ஆப்ரேசன் செய்ய வேண்டியுள்ளது என மருத்துவர்கள் கூறி விட்டனர். இன்று இரவு ஆப்ரேஷன் நடக்க உள்ளது. காயமடைந்த சகோதரர்களை ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆபிதின் மற்றும் மற்றும் த.மு.மு.க லி ம.ம.க மாவட்ட நிர்வாகிகள் சென்று நலம் விசாரித்து தேவையான மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து தந்து வருகின்றனர்.


காயமடைந்த நிலையிலும் தேர்தல் பணிகள் எங்களால் பாதிக்கப்பட்டு விட்டதே என்று அந்த சகோதரர்கள் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. சகோதரர்கள் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.


சகோதர்களின் நலன் விசாரிக்க


9894131996(நசீர்) 9629339953 (சபீர்)

Saturday, April 25, 2009

மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார் அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.