Friday, May 8, 2009

ம.ம.க. தொண்டர்கள் நாகரீகமானவர்கள்! டைம்ஸ் ஆப் இந்தியா புகழாரம்

ம.ம.க. தொண்டர்கள் நாகரீகமானவர்கள்!
டைம்ஸ் ஆப் இந்தியா புகழாரம்

அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், மாநாடுகளில் எல்லாம் எவ்வளவு அநாகரீகமாக அதன் தொண்டர்கள் நடந்து கொள்வார்கள் என்பதை பொதுமக்கள் நன்கு அறிவர். மனிதநேய மக்கள் கட்சி தனது தொண்டர்களை கண்ணியமிக்க இளைஞர்களாக உருவாக்கி வைத்திருக்கிறது. கடந்த காலங்களில் தமுமுக நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர், தொண்டர்களின் ஒழுங்கு பற்றிப் பாராட்டிப் பேசியுள்ளனர்.

தற்போது அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்த சூழ்நிலையிலும் இதன் தொண்டர் படை நாகரீகம் இழக்கவில்லை. இதனை பொதுமக்கள் கண்டு வருகின்றனர். இந்தியாவின் முதல்தரமான பத்திரிகைகளில் ஒன்றான டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு இதனை சுட்டிக் காட்டியுள்ளது.
மத்திய சென்னை ம.ம.க. வேட்பாளர் செ. ஹைதர் அ­ அவர்களின் வாக்கு சேகரிப்பு அணிவகுப்பை சுட்டிக்காட்டி எழுதியுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா (1.5.2009), ''மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் மிகவும் நாகரீகமான முறையில் பேரணியாகச் சென்றனர்'' என்று எழுதியுள்ளது.

1 comment: