Sunday, May 10, 2009

சலீமுல்லாஹ்கானை ஆதரித்து பொதுச் செயலாளர் பிரச்சாரம்.

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து த.மு.மு.க., மாநில பொது செயலாளர் ஹைதர் அலி பேசியதாவது:இதுவரை 14 முறை லோக்சபா தேர்தலை சந்தித்த மக்கள் வாழும் நிலை மாறவில்லை. பணக்காரன் மேலும் பணக்காரனாக மாறுகிறார். ஏழை ஏழையாகவே உள்ளனர். மக்கள் பிரச்னைகளுக்காக போராடுகிறோம். ஒரு கட்சி ரத்தம் குடிக்க வருகிறது. நாங்கள் முகம், நிறம், சாதி, மதம் பார்க்காமல் ரத்தம் கொடுத்து உதவுகிறோம். ராமநாதபுரம் தொகுதியில் சினிமாவில் நடிப்பவரும், ரத்தம் குடித்து அமைச்சராக இருந்தவரும் ஓட்டு கேட்கின்றனர். இவ்வாறு ஹைதர்அலி பேசினார்.

No comments:

Post a Comment