Friday, May 1, 2009

இராமநாதபுரம் ம.ம.க வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

இராமநாதபுரம் ம.ம.க வேட்பாளருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
படத்தை பெரிதாக்கி வாசிக்கவும்.

ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி தீவிர வாக்கு சேகரிப்பு

பனைக்குளம்,மே.1 ராமநாதபுரம் தொகுதி யில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாகான் நேற்று மாநில துணைபொது செயலாளர் தமிழன்அன்சாரி தலைமையில் ராமநாதபுரம் ஒன்றிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாநில த.மு.மு.க. பேச்சாளர் சிவகாசி முஸ்தபா, மாவட்ட த.மு.மு.க. துணை தலைவர் தஸ்பிக்அலி, அப்துல் ரசாக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது வேட்பாளர் சலிமுல்லாகான் பேசிய தாவது:
ராமநாதபுரம் தொகுதி இதுவரை எந்த வித வளர்ச்சியும் அடைய வில்லை. சாலைகள் மிக மோசமாக உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. என்னை வெற்றிபெற செய்தால் ராமநாதபுரம் தொகுதியை ஒரு முன்மாதிரியான தொகுதியாக மாற்ற பாடுபடுவேன். இதுநாள் வரை ஆற்றிவந்த பணிகள் அனைத்தும் மதநல்லிணக்கத்துடன் மனிதநேயத்துடன் செய்யபட்டுள்ளன. ரத்ததான முகாம், ஆம்புலன்சுவசதி கிராமங்களுக்கு குப்பை அள்ளுவதற்கான மூன்று சக்கரவாகனம், வட்டி இல்லாத கடன் திருமண உதவி தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உத விகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் வெற்றி பெற்றால் இந்த திட்டங்களை மேலும் அதிகப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment