Showing posts with label மத்திய சென்னை. Show all posts
Showing posts with label மத்திய சென்னை. Show all posts

Tuesday, May 19, 2009

மத்திய சென்னை மக்களவை தொகுதி விபரங்கள்

சட்டப் பேரவை தொகுதிகள் விபரம். 1. வில்லிவாக்கம், 2. எழும்பூர் (தனி), 3. துறைமுகம், 4. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, 5. ஆயிரம் விளக்கு, 6.அண்ணா நகர்.

மொத்த வாக்காளர்கள்: 975217

ஆண்: 489902

பெண்: 485315

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி அவர்கள் பெற்ற வாக்குகள் 13, 160

2004 தேர்தலில்
தயாநிதி மாறன் ( தி முக): 3,16,329
பாலகங்கா ( தி முக): 1,82,151

2009 மக்களவை தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன் (திமுக) - 2,85,783
முகமது அலி ஜின்னா(அதிமுக)- 2,52,329
ராமகிருஷ்ணன்(தேமுதிக)- 38,959.

Friday, May 15, 2009

கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடைபெறுமா?

சென்னை ஐஸ் அவுஸ் வாக்கு சாவடியில் மோதல் சம்பவம் முறைகேடு நடந்துள்ளதா என்று தேர்தல் அதிகாரிகள் விசாரணை.
கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடைபெறுமா?


சென்னை, மே.15 சென்னை ஐஸ் அவுஸ் வாக்குச்சாவடியில் நடைபெற்ற மோதல் சம்பவத்தின் போது முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

வன்முறை-கலவரம்
மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தயாநிதிமாறன், அ.தி.மு.க. சார்பில் முகமதுஅலி ஜின்னா, மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர் அலி ஆகியோர் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள். மத்திய சென்னை தொகுதியில் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக ஓட்டுபதிவு நடைபெற்றது. அப்போது ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள என்.கே.டி. பெண்கள் மேல் நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடவந்த திமுகவினரை தடுத்த மனித நேய மக்கள் கட்சியினர் மீது திமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சென்னை லயோலா கல்லூரியில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரி விசாரணை
இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை நேற்று மத்திய சென்னை தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா, மத்திய தேர்தல் பார்வையாளர் மற்றும் அரசியல் கட்சி தேர்தல் ஏஜெண்டுகள் பார்வையிட்டனர். இந்த வாக்கு சாவடியில் தேர்தல் நடைபெற்றபோது முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்ததும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா வன்முறை நடைபெற்ற வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்பு இது சம்பந்தமாக அறிக்கையை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுக்கு அனுப்பிவைத்தார். இந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தலாமா? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறார்கள்.

வன்முறை நடைபெற்ற 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை.

மத்திய சென்னை தொகுதியில் 10 வாக்குசாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை


சென்னை, மே.15 - முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகமது அனிபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 10 வாக்குசாவடிகளை தி.மு.க.வினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கள்ள ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியில் வன்முறையை நிகழ்த்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் ரகுபதி உள்ளிட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய சென்னை தொகுதிகளிலுள்ள 10 வாக்குசாவடிகளில் மறுவாக்குபதிவுக்கு உத்தரவிட வேண்டும்.
மறுவாக்குபதிவு நடக்கும் வரை மத்திய சென்னை தொகுதியின் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

திமுகவின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து INTJ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

இந்திய தவ்ஹீத் ஜமாத் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

மத்திய சென்னை தொகுதியில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தனது அரசு அதிகாரத்தையும் பணபலத்தை பயன்படுத்தி ஜனநாய ரீதியில் தேர்தலை சந்திக்க திறனியற்ற திமுக தனது குண்டர் படையின் மூலமும் முஸ்லிம் சமுதாயத்தை காட்டிக்கொடுக்க துணிந்துவிட்ட த.த.ஜ அமைப்பின் இனதுரோகிகளின் உதவியுடனும் கள்ள ஓட்டுபோட வந்த ஜனநாய துரோகிகளை தட்டிக் கேட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டித்தும், அதை வேடிக்கை பார்த்த காவல்துறையை கண்டித்தும் வன்முறை நடைபெற்ற பகுதியில் மறுவாக்கு பதிவு நடத்தக் கோரியும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளது.



திமுகவினர் அத்துமீறல் பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்டனம்.

மத்திய சென்னை ஐஸ் ஹவுசில் வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுப் போடவந்த திமுகவினரை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடதத்திய திமுக வின் அத்துமீறலை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் மாநிலச் செயலாளர் சகோதரர் அ.ஃபக்குருதீன் வெளியிடும் கண்டன அறிக்கை.

Thursday, May 14, 2009

சென்னை ஐஸ் அவுஸ் பகுதி போர்க்களமானது

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியே போர்க்களமானது

தி.மு.க-மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் கடும் மோதல் 8 பேர் காயம்; கார்கள், வீடு அடித்து நொறுக்கப்பட்டன
சென்னை, மே.14 சென்னை ஐஸ் அவுஸ்சில் தி.மு.க- மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில், 8 பேர் காயமடைந்தனர். தி.மு.க. பகுதி செயலாளரின் வீடும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளின் 2 கார்களும் தாக்குதலில் சேதம் அடைந்தது.

போலீஸ் கமிஷனரிடம் மனு
மத்திய சென்னை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி நேற்று காலை 10.30 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் திருவல்லிக்கேணி பகுதியில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டு போடுவார்கள் என்ற அச்சம் உள்ளதாகவும், எனவே 97-வது வார்டில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.


இந்த நிலையில், 12 மணிக்கு ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள வாக்குசாவடிகளில் கும்பல் ஒன்று கள்ளஓட்டு போட முயற்சி செய்வதாக கூறி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் 2 கார்களில் அங்கு வந்தனர். அப்போது அங்குள்ள என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஏராளமான தி.மு.க.வினர் கூட்டமாக கூடியிருந்தனர். அப்போது தி.மு.க.வினருக்கும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

போர்க்களமானது
காரில் வந்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை ஒரு கும்பல் சுற்றி வளைத்து கடப்பாறையால் காரை தாக்கினார்கள். இதில், அசன் அலி என்பவருக்கு கார் கண்ணாடி குத்தியது. மேலும், காரில் இருந்தவர்களுக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், காருக்குள் இருந்த 7 பேரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

உருட்டுக் கட்டை தாக்குதலில் காயம் அடைந்த சிலர் ரத்தம் சொட்ட சொட்ட காரில் இருந்து இறங்கி ஓடினார்கள். அப்போது சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. உருட்டுக் கட்டைகளையும் சுழற்றி அடித்தார்கள். சுமார் 30 நிமிடங்கள் அந்த சாலையே போர்க்களம் போல காட்சியளித்தது. மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் வந்த 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

கலவரக்காரர்கள் ஓட்டம்
இந்த மோதல் சம்பவம் பற்றி சென்னை நகர் முழுவதும் காட்டுத்தீ போல தகவல் பரவியது. உடனடியாக ஐஸ் அவுஸ் பகுதிக்கு போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், இணை கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் மவுரியா ஆகியோர் நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரோடும், அதிரடிப்படை போலீசாரோடும் ஐஸ்அவுஸ் பகுதிக்கு விரைந்தனர். போலீஸ் படையினர் விரைந்து வருவதை பார்த்து கலவரக்காரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, மனிதநேயமக்கள் கட்சியினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு நடந்ததாக தகவல் கிடைத்தது. உடனே துணை கமிஷனர் மனோகரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில், மனித நேய மக்கள் கட்சியினர் ஏராளமானோர் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகையிடுவது போல திரண்டனர். ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளர் அப்துல்சமதுவை அழைத்து போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். சட்டப்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதிமொழி அளித்தார்.

4 பிரிவின் கீழ் வழக்கு
மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியிடமும் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். அதன்பிறகு, மனிதநேய மக்கள் காட்சி சார்பில் ஐஸ்அவுஸ் போலீசில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த புகார் மீது ஐஸ்அவுஸ் போலீசார் இ.பி.கோ 324, 147, 148, 502/2 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வீடு மீது கல்வீச்சு
இதற்கிடையே தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் வீடு மீது பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தினார்கள். வீட்டின் இரும்புக் கேட்டை வளைத்து, பயங்கர தாக்குதல் நடந்தது. வீட்டின் முன்பக்க அறையில் இருந்த ஒரு ஸ்கூட்டர், டி.வி. கம்ப்யூட்டர் மற்றும் மேஜை, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவரின் வீடு அருகே இருந்த தி.மு.க.வின் தேர்தல் அலுவலகமும் தாக்கப்பட்டது. உடனடியாக அந்த அலுவலகத்தை மூடிவிட்டார்கள்.

போலீசார் அடித்து விரட்டினர்
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் முகாமிட்டிருந்த கமிஷனர் ராதாகிருஷ்ணன் 100 போலீசாருடன் டாக்டர் பெசன்ட் ரோட்டில் அணிவகுத்து வந்தார். அந்த ரோட்டில் அனைத்து தெருக்களிலும் புகுந்து கூட்டமாக கூடி நின்றவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். அப்போது திருவல்லிக்கேணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதர்சயீத் அங்கு வந்தார்.
போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் அவர் கடுமையான வாக்குவாதம் செய்தார். தி.மு.க.வினர் திருவல்லிக்கேணி பகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புகார் கூறினார். அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதியளித்தார். பிற்பகல் 3 மணிக்கு மேல்தான் ஐஸ்அவுஸ் பகுதியில் அமைதி நிலை திரும்பியது. இந்த மோதல் சம்பவம் காரணமாக அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் ஹைதர் அலி நிருபர்களிடம் கூறியதாவது:

மறுவாக்குபதிவு
தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ்தான் இந்த சம்பவத்திற்கு காரணம். அவர் தலைமையில் 100&க்கும் மேற்பட்ட ரவுடிகள் மனிதநேய மக்கள் கட்சியினரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் அசன் அலி, ஜாகீர் உசேன், காஜாபாய், ஹைதர் அலி, கலாவுதீன், பாரூக், நூர்ஜான் ஆகிய 7 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நேர்மையாக நடக்கவில்லை. கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. எனவே இந்த 10 வாக்குசாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இவ்வாறு ஹைதர் அலி கூறினார்.

தொடர்ந்து பதற்றம்
ஹைதர் அலி போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுத்தார். காயம் அடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர் முதலில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். 2 பேருக்கு கண்ணில் அடிபட்டிருந்ததால் எழும்பூர் கண் ஆஸ்பத்திரியிலும் மற்றவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.
தி.மு.க. தரப்பில் காயம் அடைந்த சாரங்கபாணி என்பவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை நிலவுவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு
ஐஸ்அவுஸ் மோதல் சம்பவம் தொடர்பாக, தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட 20 பேர் மீது ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோதலை தூண்டியதாக மத்திய சென்னை தி.மு.க.வேட்பாளரும் முன்னாள் மத்திய மந்திரியுமான தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியினர் போலீசாரிடம் வலியுறுத்தினார்கள். ஆனால் சம்பவம் நடந்த இடத்திற்கு அவர் வரவில்லை என்பதால் தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.

நேற்று மாலையில் இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை நகலை வாங்கிய பின்னரே, மனிதநேய மக்கள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நன்றி: தினத்தந்தி

ம.ம.க வினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய 5 குண்டர்கள் கைது

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸில் நேற்று மனித நேய மக்கள் கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக பகுதி செயலாளரையும் தேடி வருகின்றனர்.

நேற்று நடந்த வாக்குப் பதிவின்போது ஐஸ் ஹவுஸ் பகுதியில், திமுகவினர் திடீர் வன்முறையில் இறங்கினர்.

என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த தி.மு.க.வினருக்கும் மனித நேய மக்கள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

மனித நேய மக்கள் கட்சியினரை அவர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் வெறித்தனமாக தாக்கினர். ஓட ஓட விரட்டித் தாக்கினர்.

இதில் அசன்அலி உள்பட 8 பேர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த மோதலால் ஐஸ் ஹவுஸ் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டன. போர்க்களம் போல அப்பகுதி காணப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ரவுடிகளுக்குப் பெயர் போன அயோத்தியாகுப்பத்தைச் சேர்ந்த முத்துக்குமார், வடிவேல், மூர்த்தி, தனசேகர், சசிகுமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலை நடத்தச் சொல்லி தூண்டி விட்டதாக வேட்பாளர் ஹைதர் அலியால் குற்றம் சாட்டப்பட்டுள்ள தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஜெ, ராமதாஸ் கண்டனம்:

திமுகவினரால் மமகவினர் தாக்கப்பட்டதற்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,.

நேற்று காலை மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு தங்கள் வாக்குகளை செலுத்திக் கொண்டிருந்தனர். திடீரென்று திமுக ரவுடி கும்பல் அந்த வாக்குச் சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட முனைந்துள்ளது.

இதைத் தட்டிக் கேட்ட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக பலருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

கழக தொண்டர்கள் மீதும், இஸ்லாமிய சமுதாயத்தினர் மீதும் திமுகவினர் நடத்தியுள்ள கொலை வெறித் தாக்குதல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐஸ்ஹவுஸ் பகுதியில், வாக்காளர்களை விரட்டிவிட்டு கள்ள ஓட்டுப்போட்டுக்கொண்டிருந்த கும்பலை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியும், அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் காவல் துறையினரிடம் அடையாளம் காட்டி அப்புறப்படுத்த முயற்சித்தபோது, கள்ள ஓட்டுப்போட முயற்சித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஹைதர் அலியையும், அவரது கட்சியினரையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.

இதில் 6 தொண்டர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த வன்முறை தாக்குதலையும், இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினரின் போக்கையும் வன்மையாக கண்டிக்கிறேன் என அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி:Thats Tamil

கொலை வெறி தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள்.

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி இன்று காலையில் ஓட்டு போட்டு விட்டு மத்திய சென்னை பகுதியில் உள்ள “பூத்”களை நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது ஐஸ் அவுஸ் பகுதியில் ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது.




உடனே கட்சியின் பொதுச் செயலாளர் ஹைதர் அலியின் காரில் நிர்வாகிகள் விரைந்து சென்றனர். காரை அசன் அலி ஓட்டினார். ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையம் அருகே கார் சென்ற போது ஒரு கும்பல் சுற்றி வளைத்து கடப்பாறையால் காரை உடைத்தனர். இதில் அசன் அலிக்கு கார் கண்ணாடி குத்தியது. காரில் இருந்த வர்களுக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் மீரான் மொய்தீன், அசன் அலி, சாகிப்பாஷா, பாரூக், வாசிம், ஜலாலுதீன் ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு பதட்ட நிலை உருவானது.


காயம் அடைந்தவர்களை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களை வேட்பாளர் ஹைதர்அலி சென்று பார்த்து ஆறுதல் கூறினார். 6 பேர் வெட்டு பட்டதால் மனித நேய மக்கள் கட்சியினர் ஆவேசம் அடைந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மோதல் குறித்து மனித நேய மக்கள் கட்சி சென்னை மாவட்ட செயலாளர் அப்துல் கூறியதாவது:- ஐஸ் அவுஸ் பகுதியில் காமராஜ் என்பவர் தலைமையில் தி.மு.க.வினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அங்கிருந்த சிலர் எங்களை முற்று கையிட்டனர். எனவே பிரச்சினை வேண்டாம் என்று காரில் திரும்ப முயற்சி செய்தோம். அப்போது ஒரு கும்பல் எங்களை துரத்தி வந்து, காரை உடைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் 6 பேர் காயம் அடைந்தனர். உடனே ரத்தம் சொட்டச் சொட்ட போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தோம். இதனால் போலீஸ் நிலையம் முழுவதும் ரத்தம் படிந்து கிடந்தது. ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று இரவே இந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் லாட்ஜில் தங்கி இருந்தனர்.இதுபற்றி போலீசில் புகார் செய்தோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்தால் பிரச்சினை வந்து இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: மா‍லைமலர்

Wednesday, May 13, 2009

மத்திய சென்னை வன்முறை: நெல்லையில் த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி : நெல்லையில் த.மு.மு.க.,நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,,கொடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.


மத்திய சென்னையில் த.மு.மு.க.,வின் அரசியல் கட்சியான ம.ம.க.,சார்பில் ஹைதர்அலி போட்டியிட்டார். தேர்தலின் போது அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் த.மு.மு.க.,வினரை ஓட்டுபோடவிடாமல் தி.மு.க.,வினர் தடுத்ததாக தகவல்கள் வெளியாயின. இதனை கண்டித்து இன்று நெல்லையில் த.மு.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க.,மாவட்ட தலைவர் ரபீக், மாவட்ட செயலாளர் உஸ்மான்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் தி.மு.க.,வையும் கருணாநிதியையும் விமர்சித்தனர். அப்போது தி.மு.க.,கொடிகளையும் தீயிட்டு கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

காவல்துறை முன்னிலையில் ம.ம.க வினர் மீது கொலை வெறித் தாக்குதல்

காவல்துறை முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்!

பத்திரிகை அறிக்கை
நாள்: 13.05.2009

தலைமைத் தேர்தல் ஆணையரிடம் ம.மக. நேரில் புகார், மறு வாக்குப் பதிவு நடத்தவும் கோரிக்கை.










மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார். அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை (Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எமது கட்சி வேட்பாளரைக் கண்டவுடன் அவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் மேற்கண்ட ஆயுதங்களுடன் அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். உடனே கட்சிப் பிரமுகர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற ஹைதர் அலி அவர்கள், மத்திய சென்னை தேர்தல் அதிகாரியிடம் மேற்கண்ட அசம்பாவிதங்கள் குறித்து எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். மேலும் காவல்துறையிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுங்கட்சியினர் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே கலவரச் சூழலை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக குண்டர்கள், மேற்கண்ட 10 வாக்குச் சாவடிகளிலும் எண்ணற்ற கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். மேலும் கொடிய ஆயுதங்களுடன் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி பொதுமக்களை உள்ளே விடாமல் தடுத்து தொடர்ச்சியாக கள்ள ஓட்டுக்களைப் போட்டுள்ளார்கள். இதனால் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் செல்ல பயந்து தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை.

இந்த அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஐஸ்'ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட காவல்துறையினர் மனிதநேய மக்கள் கட்சியினருக்கு எதிரான வன்முறையை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தேர்தல் அதிகாரிகளும் அலுவலர்களும் திமுகவினருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.

இச்சூழ்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் வன்முறைகள் நடந்தேறிய வாக்குச் சாவடிகள் எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட பத்து வாக்குச் சாவடிகளில் மத்திய காவல் படை உதவியுடன் மறு தேர்தல் நடத்துமாறும், அதுவரை மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்குமாறும், மேலும் திமுக குண்டர்களுக்கு ஆதரவாகவும், மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட திமுக குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறும் மாநில தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.


(மு. ஜைனுல் ஆபிதீன்)
செய்தித் தொடர்பாளர், ம.ம.க.
செல்: 99942 92932

Sunday, May 10, 2009

துறைமுகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

மத்திய சென்னை வேட்பாளர் செ.ஹைதர் அலி துறைமுகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

திறந்த ஜீப்பில் பிரச்சாரம்.

மேத்தாநகர், அமிஞ்சிக்கரை, செல்லியம்மன் தெரு, தேவகியம்மாள் தெரு, செனாய்நகர், டி.பி.சத்திரம் ரோடு, பரமேஸ்வரன் நகர், கல்லறை சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன், மண்டபம் சாலை, வ.உ.சி. நகர், மகாத்மா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று ரெயில் என்ஜின் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

த.மு.மு.க. தென் சென்னை மாவட்ட செயலாளர் ஹனிபா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கவுஸ்அலி, ரெட்டை மலை சீனிவாசனார் பேரவை நிறுவனர் நடராஜன், தலித் கலாம் அமைப்பை சேர்ந்த பாஸ்கர், மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் ஹைதர்அலிக்கு ஆதரவு திரட்டினர்.

மத்திய சென்னை வாக்காளப் பெருமக்களே!

Friday, May 8, 2009

‘Maran aides asked me not to contest’ பேரம் பேசிய தயாநிதி மாறன் கும்பல் அம்பலப் படுத்தும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...

‘Maran aides asked me not to contest’

Express News Service
First Published : 07 May 2009 03:11:00 AM IST

Last Updated :
07 May 2009 08:07:03 AM IST
http://epaper.newindpress.com/NE/NE/2009/05
/07/ArticleHtmls/07_05_2009_004_001.shtml

மத்திய சென்னையில் போட்டியிடாமல் வேறு தொகுதி மாறினால்....
பேரம் பேசிய தயாநிதி மாறன் கும்பல்
அம்பலப் படுத்தும்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...

CHENNAI: Manithaneya Makkal Katchi (MMK) leader and central Chennai candidate Hyder Ali, on Wednesday, alleged that DMK candidate Dayanidhi Maran’s associates had asked him not to contest from the central Chennai constituency.

Speaking to The New Indian Express Hyder Ali said, “I and my friends have been approached by people associated with Dayanidhi Maran. They had asked me to not contest from the central Chennai constituency.”

He said that he was offered ‘incentives’ to shift constituency, “They (DMK) promised to take care of my election expenses in any other constituency.”

Rejecting Maran’s chances of winning from central Chennai, he said, “Maran cannot be close to the people, like we are. How can someone who cannot be close to even the party cadre, be close to the people?”

He attributed Maran’s previous victory to the support by the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK), the predecessor of MMK, “Last time he won because of our support. This time the results of central Chennai are going to be shocking to the State’s political leaders. Moreover, they were exposed due to their family problems and people have realised their true nature.” The Towheet Jamaat’s support for the DMK would further alienate Muslim voters, from the DMK, who form around 30 per cent of the electorate in the constituency according to Ali, “It is good if the Towheet Jamaat expresses support for the DMK. It will influence undecided voters to vote in our favour, because it will be clear to these voters as to who is honest.”

Speaking about AIADMK’s candidate Mohammed Ali Jinnah he said, “The mood is anti-DMK and if Muslim voters want to vote against the DMK they would not prefer the AIADMK. Now we have provided an alternative to them.”

“In any case the people of Tamil Nadu are beyond religious differences and will vote for those who will serve them,” he said.


''தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சி தமிழக அரசியலில் காலகாலமாக கோலோச்சி வரும் ஏதேச்சதிகார வர்க்கத்தினரை பீதியடைய வைத்து புலம்ப வைத்தது.

பரம்பரை பரம்பரையாக மக்களின் தேவைகளை புறக்கணித்து அரசியல் அதிகாரத்தை சுவைத்து வரும் சக்திகளின் பதவி ஆசையையும், பணத்திமிரையும், ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து பேரம் பேசிய ஓர் இழி செயலை மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி தோலுரித்துக் காட்டியுள்ளார்.

07.05.2009 ஆம் தேதி வெளியாகி உள்ள நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வேட்பாளர் ஹைதர்அலியின் நேர்காணல் வெளியாகியிருந்ததது. அதில் மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலி பேட்டியளித்திருந்தார் அதில்,


ஹைதர் அலி எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இது குறித்து கூறும்போது ''தன்னையும் தனது சகாக்களையும் தயாநிதிமாறனின் ஆட்கள் அணுகி மத்திய சென்னையில் போட்டியிட வேண்டாம் என வற்புறுத்தியதாக தெரிவித்தார். அதோடு பெரும் தொகை தருவதாகவும் வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்றும், அவ்வாறு வேறு தொகுதியில் போட்டியிட்டால் அதற்கான அனைத்துச் செலவுகளையும் அவர்களே (தயாகும்பல்) பார்த்துக் கொள்வதாகவும், கூறியதாகவும்'' ஹைதர் அலி தெரிவித்தார். மத்திய சென்னையில் தயாநிதிமாறனின் வெற்றி வாய்ப்பை மறுத்த ம.ம.க வேட்பாளர் எங்களைப் போல் மக்களோடு அவர்களால் ஒன்றிப் பழக முடியாது. இணைந்த பணியாற்ற முடியாது. கட்சிக்காரர்களோடு கூட நெருங்கிப் பழக முடியாத ஒருவர், சாதாரண மக்களோடு எவ்வாறு நெருங்கி வருவார் என்றும் செ. ஹைதர் அலி வினா விடுத்தார்.


இதற்கு முன்பு தயாநிதிமாறன் பெற்ற வெற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேராதரவினால் கிடைத்த வெற்றியாகும். இந்த மக்களவைத் தேர்தலின் முடிவு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை வழங்கும். மக்கள் உண்மையை உணர்ந்து விட்டார்கள்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதின் மூலம் முஸ்லிம் வாக்காளர்களை விட்டு திமுக மேலும் அந்நியப்படுத்தி விட்டது. தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததனால் இதுவரை யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவெடுக்காமல் இருந்த வாக்காளர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். நேர்மையாளர்கள் யார்? என்பதை அது தெளிவு படுத்தும்' என்றார்.


அ.தி.மு.க வேட்பாளர் முஹம்மது அலி ஜின்னாவைப் பற்றி கூறும்போது வாக்காளர்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். முஸ்லிம் வாக்காளர்கள் தி.மு.கவுக்கு எதிராக வாக்களிப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலிக்கவே மாட்டார்கள். நாங்கள் மக்களுக்கு மாற்றத்தினை வழங்குவோம்' என்றார்.

வில்லிவாக்கம் பகுதியில் வாக்குச் சேகரிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் வில்லிவாக்கம் பகுதியில் வாக்குச் சேகரி்த்தபோது...

Tuesday, May 5, 2009

மத்தியில் காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத அரசு ஆட்சி அமைக்க உதவுவோம்.

வக்பு வாரிய தலைவராக இருந்தபோது ஊழல் செய்தேனா? சி.பி.ஐ. வேண்டுமானால் விசாரிக்கட்டும்
ஹைதர் அலி பேட்டி


சென்னை, மே.5- வக்பு வாரிய தலைவராக இருந்தபோது ஊழலில் ஈடுபடவில்லை என்றும், தேவை என்றால் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் ஹைதர் அலி கூறினார்.

தேர்தல் அறிக்கை

முன்னாள் வக்பு வாரிய தலைவரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான செ.ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னையில் நேற்று அவர் வெளியிட்டார்.

பின்னர், ஹைதர்அலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை மக்களுக்கு குடியிருப்பு

நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால், ஒரு வருடத்திற்குள் மக்களுக்கு நல்வாழ்வு அளிப்பேன் என்று உத்தரவாதம் தருகிறேன். அங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கு குடியிருப்பு கட்டித்தருவேன்.

மத்திய சென்னை தொகுதியில்தான் சாலையோர வியாபாரிகள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் வணிக வளாகம் அமைத்து தருவேன். கூவம் நீரை சுத்தப்படுத்தி, அந்த தண்ணீரை விவசாய நிலத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

நாங்கள் வெற்றி பெற்றால், மத்தியில் காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத அரசு ஆட்சி அமைக்க உதவுவோம். இடதுசாரிகள் கட்சியுடன் சேர்ந்து இதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.

நான் வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, ஊழல் செய்ததாக சிலர் கூறுகிறார்கள். சி.பி.ஐ. வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்தே நான் விலகிக்கொள்கிறேன்.

இவ்வாறு ஹைதர் அலி கூறினார்.
நன்றி: தினத்தந்தி

Friday, May 1, 2009

பாதிரியார் ஷேவியர் அருள்ராஜ் அவர்களை சந்தித்து மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.

மனிதநேய மகக்ள் கட்சி மத்திய சென்னை வேட்பாளர் செ.ஹைதர் அலி அவர்கள் பாதிரியார் ஷேவியர் அருள்ராஜ் அவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய காட்சி.

Tuesday, April 28, 2009

மனிதநேய மக்கள் கட்சிக்கு “ரெயில் என்ஜின்” சின்னம்: 4 வேட்பாளர்களும் ஒரே சின்னத்தில் போட்டி

மனிதநேய மக்கள் கட்சிக்கு “ரெயில் என்ஜின்” சின்னம்:
4 வேட்பாளர்களும் ஒரே சின்னத்தில் போட்டி

ஏப்: 28. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரத்தால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், இந்திய தவ்கீத் ஜமாத், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். மனித நேய மக்கள் கட்சி மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாட்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மயிலாடுதுறையில் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் ஹைதர்அலி, ராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ்கான், பொள்ளாட்சியில் உமர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள 4 வேட்பாளர்களும் தங்களுக்கு ரெயில் என்ஜின் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். இதன்படி இவர்கள் அனைவருக்கும் ரெயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் ஹைதர் அலி நேற்று ரெயில் என்ஜின் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

திருவல்லிக்கேணி பகுதியில் எல்லிஸ்.ரோடு, பைகிராஸ்ரோடு, பெல்ஸ் ரோடு, திருவல்லிக் கேணி நெடஞ்சாலை, அபுல்ஹசன் ரோடு, பார்டர் தோட்டம், பெரிய தெரு, பார்த்தசாரதி ரோடு மற்றும் சேப்பாக்க பகுதிகளிலும் ரெயில் என்ஜின் சின்னத்தை காட்டி ஹைதர்அலி ஓட்டு கேட்டார்.

திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நாசர் உமரி, த.மு.மு.க. பொருளாளர் ரகமதுல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்துல்சலாம், த.மு.மு.க. மாவட்ட தலைவர் சீனிமுகமது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நேற்று காலையில் மட்டும் திருவல்லிக்கேணி பகுதியில் 20 கிறிஸ்தவ பாதிரியார்களை சந்தித்து ஹைதர் அலி ஆதரவு திரட்டியது குறிப்பிடத்தக்கது.